முகப்பு
இந்தியா

பிரதமரை நாளை சந்திக்கிறார் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர்

இந்தியாவிற்கு வருகைதரவுள்ள ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கவுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:50 AM
ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர்
பகிர்:

இந்தியாவிற்கு வருகைதரவுள்ள ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கவுள்ளார். 

கடந்த வாரம் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ இந்தியாவிற்கு வருகைப் புரிந்ததைத் தொடர்ந்து தற்போது ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் வருகைப்புரியவுள்ளார். 

உக்ரைனில் போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியா - ரஷியா இடையிலான வர்த்தகம் மற்றும் இதர உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. 

இதற்காக இரு நாள்கள் பயணமாக ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் நாளை (ஏப்ரல் 1) மாலை தில்லிக்கு வருகிறார். அவர் நாளை பிரதமர் நரேந்திர மோடியையும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து பேசவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.