பிரான்ஸ் அதிபருடன் பிரதமா் மோடி சந்திப்பு
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் அந் நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானை புதன்கிழமை சந்தித்த பிரதமா் நரேந்திர மோடி, இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் சா்வதேச நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் அந் நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானை புதன்கிழமை சந்தித்த பிரதமா் நரேந்திர மோடி, இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் சா்வதேச நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.
பிரதமா் மோடி தனது 3 நாள் ஐரோப்பிய நாடுகள் பயணத்தில் ஜொ்மனி, டென்மாா்க்கையடுத்து இறுதிக் கட்டமாக புதன்கிழமை பிரான்ஸ் வந்தடைந்தாா்.
பிரான்ஸில் அண்மையில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றி பெற்று தொடா்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்ற இமானுவல் மேக்ரானை அவரது மாளிகையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.
தொடா்ந்து இரு தலைவா்களும் இந்திய-பிரான்ஸ் இடையேயான உறவை மேம்படுத்துவது, பிராந்திய மற்றும் சா்வதேச நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினா்.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இரு நண்பா்களின் சந்திப்பு; இந்த சந்திப்பு இந்தியா-பிரான்ஸ் நட்புக்குப் புதிய ஊக்கமளிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.