முகப்பு
இந்தியா

ஒடிசாவில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் மீட்பு, ஒருவர் மாயம்

ஒடிசாவின் குர்தா மாவட்டத்தில் உள்ள சிலிகா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் மாயமாகியுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
(கோப்புப்படம்)
பகிர்:

ஒடிசாவின் குர்தா மாவட்டத்தில் உள்ள சிலிகா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் மாயமாகியுள்ளார். 

பலசோரிலிருந்து 12 பேருடன் சென்ற படகு பலத்த மேற்கு காற்று காரணமாக ஒடிசாவின் குர்தா மாவட்டத்தில் உள்ள சிலிகா ஏரியில் கவிழ்ந்து, விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர் இதுவரை 11 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மேலும் ஒருவர் மாயமாகியுள்ளனர். 

சுற்றுலாப் பயணிகள் 9 பேர், பலுகாவ்ன் மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 5 குழுக்கள் காணாமல் போன ஒருவரைத் தேடி வருவதாக காவல்துறை தெரிவித்தனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →