சிவ சேனை எம்எல்ஏ மாரடைப்பால் துபையில் மரணம் 
இந்தியா

சிவ சேனை எம்எல்ஏ மாரடைப்பால் துபையில் மரணம்

சிவ சேனை எம்எல்ஏ ரமேஷ் லட்கே, துபையில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52.

DIN


மும்பை: சிவ சேனை எம்எல்ஏ ரமேஷ் லட்கே, துபையில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52.

ரமேஷ் லட்கே தனது குடும்பத்தினருடன் துபையில் விடுமுறையைக் கழிக்க சென்றிருந்த போது, புதன்கிழமை இரவு மாரடைப்பால் மரணம் அடைந்ததாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

லட்கே, அந்தேரி கிழக்கு தொகுதியில் சிவ சேனை சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர். அவரது உடல் இன்று மும்பைக்கு எடுத்து வரப்படும் என்று கூறப்படுகிறது.

அவரது உடலை மும்பைக்கு எடுத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிவ சேனைக் கட்சி ஆட்சியில் அங்கம் வகித்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடியின் உரை இந்தியாவின் தாா்மிக நிலையைக் குறைத்துவிட்டது: காங்கிரஸ் விமா்சனம்

ஒரு லட்சத்துக்கும்மேல் வருவாய் ஈட்டிய ஓட்டுநா், நடத்துநா்களுக்குப் பரிசு வழங்கல்!

அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற பெண் உயிரிழப்பு

கோட்டக்குப்பம் அருகே இரு வீடுகளில் 12 பவுன் நகை திருட்டு!

மேல்மலையனூா் ஒன்றியத்தில் ரூ.1.69 கோடியில் கட்டப்பட்ட அரசு கட்டடங்கள் திறப்பு!

SCROLL FOR NEXT