இந்தியா

சிவ சேனை எம்எல்ஏ மாரடைப்பால் துபையில் மரணம்

DIN


மும்பை: சிவ சேனை எம்எல்ஏ ரமேஷ் லட்கே, துபையில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52.

ரமேஷ் லட்கே தனது குடும்பத்தினருடன் துபையில் விடுமுறையைக் கழிக்க சென்றிருந்த போது, புதன்கிழமை இரவு மாரடைப்பால் மரணம் அடைந்ததாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

லட்கே, அந்தேரி கிழக்கு தொகுதியில் சிவ சேனை சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர். அவரது உடல் இன்று மும்பைக்கு எடுத்து வரப்படும் என்று கூறப்படுகிறது.

அவரது உடலை மும்பைக்கு எடுத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிவ சேனைக் கட்சி ஆட்சியில் அங்கம் வகித்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT