இந்தியா

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

DIN

ஜம்மு காஷ்மீர் பந்திப்போராவில் அரகம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த என்கவுண்டர் குறித்து ஜம்மு காஷ்மீர் மண்டல காவல்துறை ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மேலும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளான். இதன் மூலம் மொத்த பயங்கரவாதிகளின் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. தேடுதல் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது என பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக காலையில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பந்திப்போராவின் அரகம் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. கடந்த புதன் கிழமை இரு பிரிவினருக்கும் இடையே சலிந்தர் காட்டுப் பகுதியில் நடைபெற்ற  துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவன்  கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT