இந்தியா

ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு: காவலர் தேர்வு ரத்து

DIN

ராஜஸ்தானில் காவலர் துறையில் ஆட்சேர்ப்புத் தேர்வின் வினாத்தாள் கசிந்ததையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

மே 14-ம் தேதி நடைபெற வேண்டிய தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்துள்ளது. ஜோத்வாரா நகரில் உள்ள தேர்வு மையத்திலிருந்து  வினாத்தாள் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும், வினாத்தாள் கசிவு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்படுவர் என்று தலைமைக் காவலர் தெரிவித்துள்ளார். 

இந்த தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்று காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. 

ராஜஸ்தான் காவல்துறை கான்ஸ்டபிள் பதவிக்கான எழுத்துத் தேர்வு மே 13 முதல் மே 16 வரை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT