கோப்புப்படம் 
இந்தியா

ஆந்திரத்தில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.

DIN

அனந்தபூர்: ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர் மற்றும் 2 பேர்  படுகாயம் அடைந்துள்ளனர் என்று காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இன்று அதிகாலை அனந்தபூரில் உள்ள முலகலேடு கிராமத்தில் உள்ள குடியிருப்பில் சிலிண்டர் வெடித்தது. இந்த வெடிவிபத்தின் தாக்கத்தால் பக்கத்து வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர் மற்றும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு நடவடிக்கை தொடங்கினர். 

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் உலகக்கோப்பை: ஸ்மிரிதி, ஹர்மன்ப்ரீத் ஆட்டமிழப்பு - இந்தியா தடுமாற்றம்!

என் மன வானில்... ஹிமா பிந்து!

Online Game-ல் பாலியல் துன்புறுத்தல்! தனது மகள் சந்தித்த சங்கடம் குறித்து Akshay kumar வெளிப்படை!

திருச்சி ஐஐஎம்-இல் நூலகப் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பிகாரில் நவ. 22க்குள் தேர்தல் - வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT