இந்தியா

கோகரன்நாத் இடைத்தேர்தல்: 2 மணி நேரத்தில் 10 சதவீத வாக்குகள் பதிவு! 

PTI

உத்தரப் பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடந்துவரும் நிலையில் கோலா கோகரன்நாத் தொகுதியில் வாக்குப்பதிவின் முதல் 2 மணி நேரத்தில் சராசரியாக 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. 

ஆறு மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருவதாக மூத்த அதிகாரி கூறியுள்ளார். அதேசமயம் சில வாக்குச்சாவடி மையங்களான லாலாஹாபூர், மதன்பூர் மற்றும் லக்ஷமஞ்சதி ஆகிய இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பாஜக கைப்பற்றியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளன. 

இந்நிலையில், முதல் இரண்டு மணி நேரத்தில் 10 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT