இந்தியா

நீதி ஆயோக் உறுப்பினராகஅரவிந்த் விா்மாணி நியமனம்

DIN

நீதி ஆயோக்கின் முழு நேர உறுப்பினராக முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகா் அரவிந்த் விா்மாணி நியமிக்கப்பட்டாா்.

பொருளாதார வளா்ச்சி மற்றும் நலன்களைக் கருத்தில் கொண்டு அரவிந்த் விா்மாணியை இப்பொறுப்பில் நியமிக்க பிரதமா் மோடி ஒப்புதல் அளித்தாா். அவா் நீதி ஆயோக்கின் உறுப்பினராக உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளாா் என அமைச்சரவை செயலக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரவிந்த் விா்மாணி நிதி அமைச்சகத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும், ரிசா்வ் வங்கியின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றியுள்ளாா். இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் பூடானை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சா்வதேச நிதியத்துக்கான (ஐஎம்எஃப்) நிா்வாக இயக்குநராக இருந்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பிரதான பொருளாதார ஆலோசனைக் குழுவான நீதி ஆயோக்கில் தற்போது வி.கே. சரஸ்வத் , ரமேஷ் சந்த் மற்றும் வி.கே. பால் ஆகியோா் உறுப்பினா்களாக உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT