முகப்பு
இந்தியா

உ..பி.யில் மண் மேடு சரிந்து விழுந்து இரண்டு பெண்கள் பலி!

உத்தரப் பிரதேசத்தின், சேலம்பூர் கிராமத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:52 AM
9mud1_0910chn_126_3
பகிர்:

உத்தரப் பிரதேசத்தின், சேலம்பூர் கிராமத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். 

புதன்கிழமை மாலை இச்சம்பவம் நடைபெற்றதாகக் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் வர்மா தெரிவித்தார். 

பெண்கள் நால்வரும் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அருகிலிருந்த மண்மேடு திடீரென அவர்கள் மீது சரிந்து விழுந்தது. அருகிலுள்ளவர்கள் அவர்களைக் காப்பாற்ற அவர்களை வெளியே இழுப்பதற்குள் பூனம்(27) பிரவேஷ் (24) ஆகிய இரு பெண்களும் இறந்துவிட்டனர். 

உயிரிழந்தவர்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். காயமடைந்த இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →