முகப்பு
இந்தியா

மாடு மோதி சேதமடைந்த சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில்

மைசூரு-சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் அரக்கோணம் இடையே கன்றுக்குட்டியின் மீது மோதியதில் சேதமடைந்தது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:52 AM
கோப்புப்படம்
பகிர்:

மைசூரு-சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் அரக்கோணம் இடையே கன்றுக்குட்டியின் மீது மோதியதில் சேதமடைந்தது. 

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 11ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தொடக்கி வைத்தார். சென்னை- மைசூரு இடையே பெங்களூரு வழியாக இயக்கப்படும் இந்த ரயிலானது நாட்டின் 5ஆவது வந்தே பாரத் ரயிலாகும். 

இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு மைசூருவிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்த வந்தே பாரத் ரயில் அரக்கோணம் அருகே கன்றுக்குட்டியின் மீது மோதியது. இதில் ரயிலின் முன்பக்க பகுதி சேதமடைந்தது. 

விபத்தின் போது வந்தே பாரத் ரயில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பயணித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கன்றுக்குட்டியின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

அக்டோபர் மாதம் முதல் இதுவரை வந்தே பாரத் ரயில்கள் இதேபோன்று 5 விபத்துகளை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →