இந்தியா

அரவிந்த் கேஜரிவாலுக்கு அரசியல் கண்புரை : பாஜக

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அரசியல் கண்புரையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக தாக்கிப் பேசியுள்ளது.

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அரசியல் கண்புரையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக தாக்கிப் பேசியுள்ளது.

தனது அரசின் மீதான உற்பத்தி வரி ஊழல் மற்றும் பள்ளி வகுப்பறைகள் கட்டப்பட்டதில் செய்த ஊழல் ஆகியவற்றை மறைத்து தனக்குத் தானே நேர்மையானவர் என்ற சான்றிதழை அரவிந்த் கேஜரிவால் அளித்துக் கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜகவைச் சேந்த செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நாடு முழுவதுக்கும் அரவிந்த் கேஜரிவால் ஒரு நேர்மையற்றவர் என்பது தெரிந்துவிட்டது. சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் பெயர் இல்லாதது நாங்கள் நேர்மையானவர்கள் என்பதற்கு சான்று எனப் பேசியுள்ளார். அதேபோல பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக தலைவர்கள் யாராவது நேர்மையானவர்கள் எனக் கூறிக் கொள்ள முடியுமா என்று கேட்கிறார். அவர் அரசியல் கண்புரையால் பாதிக்கப்பட்டுள்ளார். தில்லி உற்த்தி வரி ஊழல் மற்றும் பள்ளி வகுப்பறைகள் கட்டப்பட்டதில் செய்த ஊழல் அவருக்குத் தெரியவில்லை. சிபிஐ 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது  என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் அதிபராகும் ராணுவத் தலைமைத் தளபதி? ராணுவம் விளக்கம்!

சிராஜுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: மொயின் அலி

ஐசிசி ஜூலை மாத விருதுக்கான போட்டியில் 3 கேப்டன்கள்! முச்சதம் விளாசிய முல்டருக்கு கிடைக்குமா?

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தையை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

SCROLL FOR NEXT