பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு சனிக்கிழமையன்று இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
டிவிட்டர் பக்கத்துக்குச் சென்று பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ பக்கத்தைத் தேடினால், சட்டரீதியான கோரிக்கையை அடுத்து, இந்தியாவில் இப்பக்கம் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதன் பின்னணியில், எந்த விதமான செயல்பாடு உள்ளது இதுவரை தெளிவாகத் தெரியவரவில்லை.
இதையும் படிக்க.. பொன்னியின் செல்வன் பிளஸ் என்ன? ஏமாந்தவர்கள் யார்?
உள்நாட்டு சட்டங்களை மீறும் வகையில் கருத்துகள் இடம்பெற்றதால், மத்திய அரசு அதிகாரிகளிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கையை ஏற்று, டிவிட்டர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.