6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் தெரிவித்துள்ளது.
7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் நவம்பர் 6 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் தெரிவித்துள்ளது.
மகாராஸ்டிரம், பிகார், ஹரியானா, தெலுங்கானா, உத்தர பிரதேசம், ஒடிசாவில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்: பிரபல பாடலின் விளம்பர விடியோ
அந்தேரி கிழக்கு(மகாராஸ்டிரம்), மோகமா, கோபால்கஞ்ச் (பிகார்), ஆதம்பூர் (ஹரியானா), முனுகோட் (தெலுங்கானா), கோலா கோக்ரநாத்(உ.பி.), தாம்நகர்(ஒடிசா) சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.