இந்தியா

கம்போடியாவில் சிக்கியிருந்த 14 பேர் மீட்பு: மத்திய அரசு

சட்ட விரோத கும்பல்களால் கம்போடியாவில் கடத்தப்பட்ட 14 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

DIN

சட்ட விரோத கும்பல்களால் கம்போடியாவில் கடத்தப்பட்ட 14 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

மியான்மர் நாட்டில் நடந்தது போலவே கம்போடியாவிலும் போலி வேலைவாய்ப்பு நடப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லாவோஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இதேபோன்ற மோசடியில் இந்தியர்கள் சிக்கியிருப்பதாக அரிந்தம் பக்சி தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து மாநில அரசுகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கம்போடியா மற்றும் லாவோஸ் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரங்களில் மூலம் வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீடாமங்கலத்தில் நாளை நலவாரிய தொழிலாளா்களுக்கான மருத்துவ முகாம்

பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீட்டை உயா்த்தி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

சாலையின் குறுக்கே நாய் வந்ததால்: இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த 4 போ் காயம்

SCROLL FOR NEXT