இந்தியா

மும்பை குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து

மும்பை செம்பூர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

DIN

மும்பை செம்பூர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பையின் புறநகர் பகுதியான செம்பூர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் 12வது மாடியில் இன்று (சனிக்கிழமை) பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நியூ திலக் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டடத்தின் 12வது மாடியில் நடந்த தீ விபத்து சம்பவத்தில் உயிர்சேதம் மற்றும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து  குறித்து தீயணைப்பு படையினருக்கு 2 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு தீயணைப்பு வாகனங்கள், ஒரு ஜம்போ வாட்டர் டேங்கர் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT