முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் 400 கிலோ கழுதை இறைச்சி பறிமுதல்

ஆந்திரத்தில் 400 கிலோ கழுதை இறைச்சியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
கோப்புப்படம்
பகிர்:

ஆந்திரத்தில் 400 கிலோ கழுதை இறைச்சியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்தில் சட்டவிரோதமாக கழுதை இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக பீட்டா அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து, பாபட்லா மாவட்டத்தில் நான்கு இடங்களில் காவல்துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கழுதை இறைச்சியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக சிலரையும் அவர்கள் கைது செய்தனர். கழுதையை இறைச்சிக்கு பயன்படுத்துவது சட்ட விரோதம் என எச்சரித்த அதிகாரிகள், இதை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

ஆந்திரத்தில் இறைச்சிக்காக கழுதைகளை கொல்லும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கழுதை இறைச்சியை உண்டால் வலிமையும், வீரியமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →