ராகுல் காந்தியின் 39வது நாள் நடைப்பயணம் தொடக்கம்
கர்நாடகத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தின் 39வது நாள் யாத்திரை ஞாயிற்றுக்கிழமை இன்று (அக்.16) காலை தொடங்கியது.
கர்நாடகத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தின் 39வது நாள் யாத்திரை ஞாயிற்றுக்கிழமை இன்று (அக்.16) காலை தொடங்கியது.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 39-ஆவது நாளாக, கா்நாடகத்தில் 15-ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பல்லாரி மாவட்டத்தின் சங்கனாகல் கிராமத்திலிருந்து இன்று காலை 7 மணியளவில் நடைப்பயணம் தொடங்கியது.
கடந்த சில நாள்களுக்கு முன் நடைப்பயணத்தின் இடையே மைசூரில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்ற போது, மழை கொட்டித் தீா்த்தது. அப்போது, மழையை பொருட்படுத்தாத ராகுல் காந்தி நனைந்தபடியே பொதுக் கூட்டத்தில், ‘மழை எங்கள் நடைப்பயணத்தை நிறுத்த முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார்.