ஒடிசாவின், புவனேஸ்வரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளியின் மகளை ஏமாற்றிய மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்தார் நோயாளி ஒருவர். சிகிச்சையின்போது தன் மகளை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார் மருத்துவர்.
மருத்துவர் அளித்த திருமண வாக்குறுதியின் பேரில், 26 வயதுடைய பெண்ணும் மருத்துவரிடம் நெருங்கிப் பழகியுள்ளார். பின்னர், தந்தையின் சிகிச்சை முடிந்ததும், பெண்ணை அழகாகக் கழற்றிவிட்டுள்ளார் மருத்துவர்.
பின்னர், அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் மருத்துவருக்கு நிச்சயதார்த்தம் செய்ததாக தகவல் வெளியானதையடுத்து, பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் மருத்துவர் மகிளா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.