முகப்பு
இந்தியா

தில்லியில் 455 கிலோ பட்டாசுகள் பறிமுதல்: 2 பேர் கைது!

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்ட தில்லியில் 455 கிலோ பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்துள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்ட தில்லியில் 455 கிலோ பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்துள்ளனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஷிவ் ராம் பூங்காவில் வசிக்கும் 27 வயதான ரிஷி, உ.பி.யின் பிரோசாபாத்தைச் சேர்ந்த அமித்(28) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஹரியாணாவின் ரோஹ்தக்கில் பட்டாசுகளை வாங்கி தில்லியில் விற்பனை செய்தனர். 

நிஹால் விஹார் பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமான ஒரு நபர் தலையில் பெரிய பை சுமந்து செல்வதைக் கண்டனர். தப்பிக்க முயன்ற குற்றவாளியை போலீசார் பிடித்தனர். மேலும் பட்டாசுக்கான உரிமம் அவரிடம் இல்லை.

அதன்பின்னர், மற்றொரு நபரை போலீசார் கைது செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →