கட்டடம் இடிந்து விழப்போவதை கணித்த தலைமைப் பேராசிரியர்; நூலிழையில் தப்பியவர்கள் 
இந்தியா

கட்டடம் இடிந்து விழப்போவதை கணித்த தலைமைப் பேராசிரியர்; நூலிழையில் தப்பியவர்கள்

முன்கூட்டியே கணித்த தலைமைப் பேராசிரியர், அங்கிருந்தவர்களை வெளியேற்றிய அடுத்த நொடியே அவர் கணித்ததுபோல நடந்தது பலரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

DIN


மைசூரு: பழைமையான கல்லூரியின் வேதியியல் ஆய்வுக் கூட கட்டடம் இடிந்து விழப்போவதை முன்கூட்டியே கணித்த தலைமைப் பேராசிரியர், அங்கிருந்தவர்களை வெளியேற்றிய அடுத்த நொடியே அவர் கணித்ததுபோல நடந்தது பலரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மைசூருவில் பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த மகாராணி கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் அனைவரும், வேதியியல் ஆய்வுக் கூடத்திலிருந்து வெளியேறிய அடுத்த நொடியே அது இடிந்து விழுந்தது. நூலிழையில் உயிர் தப்பிய அனைவரும் அடைந்த அதிர்ச்சி சற்று நேரம் வரை அகலவில்லை.

இதற்குக் காரணம், கல்லூரி தலைமைப் பேராசிரியர் ரவியின் சமயோஜித புத்திதான் காரணம், அவரால்தான் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என்கிறார்கள்.

வேதியியல் ஆய்வுக் கூடத்தின் மேல்கூரையிலிருந்து தண்ணீர் கசிவதாகவும், விரிசல்கள் அதிகரித்திருப்பதாகவும் துறை தலைவர் தலைமைப் பேராசிரியரிடம் கூறியுள்ளார்.

உடனே நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்த அவர், உடனடியாக அங்கிருந்து அனைவரும் வெளியேறி, மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு கதவைப் பூட்டுமாறு உத்தரவிட்டார்.

அவர் சொன்னபடி கதவைப் பூட்டியதும், மைசூரு தொகுதி எம்எல்ஏவுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்து, கல்லூரியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில், கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக சி. விஜயபாஸ்கர் வீடு, தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நடத்தும் 48 மணி நேரம் போராட்டத்தால் வெறிச்சோடிய அலுவலகம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து!

தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை

பிகார் பேரணியில் பைக்கை பறிகொடுத்த இளைஞர்.! புதிய பைக் வாங்கிக் கொடுத்த ராகுல்!

SCROLL FOR NEXT