இந்தியா

அச்சம்: குடும்பத்தோடு வீடுகளை காலி செய்த காஷ்மீரி பண்டிட்கள்!

காஷ்மீர் பண்டிட் பூரன் கிரிஷன் பட் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 10-க்கும் மேற்பட்ட காஷ்மீரி பண்டிட்கள் தங்கள் குடும்பத்தோடு வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 

DIN

காஷ்மீர் பண்டிட் பூரன் கிரிஷன் பட் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அச்சத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட காஷ்மீரி பண்டிட்கள் தங்கள் குடும்பத்தோடு வீடுகளை விட்டு வெளியேறி ஐம்முவுக்கு இடம் பெயர்ந்தனர். 

அக்டோபர் 15ம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சௌத்ரிகுண்ட் கிராமத்தில் பட் தனது வீட்டிற்கு வெளியே பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். 

பட்  கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 35 பேர் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சௌதரிகுண்ட் கிராமத்தில் உள்ள தங்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறி ஜம்முவுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அக்.18 அன்று உள்ளூர் அல்லாத மோனிஷ் குமார் மற்றும் ராம் சாகர் ஆகிய இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, அவர் தங்கியிருந்த வாடகை வீட்டின் மீது பயங்கரவாதி ஒருவர் கையெறி குண்டு வீசியதில் இருவரும் உயிரிழந்தனர். 

பயங்கரவாதி கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு இடத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT