காஷ்மீர் பண்டிட் பூரன் கிரிஷன் பட் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அச்சத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட காஷ்மீரி பண்டிட்கள் தங்கள் குடும்பத்தோடு வீடுகளை விட்டு வெளியேறி ஐம்முவுக்கு இடம் பெயர்ந்தனர்.
அக்டோபர் 15ம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சௌத்ரிகுண்ட் கிராமத்தில் பட் தனது வீட்டிற்கு வெளியே பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.
பட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 35 பேர் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சௌதரிகுண்ட் கிராமத்தில் உள்ள தங்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறி ஜம்முவுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்.18 அன்று உள்ளூர் அல்லாத மோனிஷ் குமார் மற்றும் ராம் சாகர் ஆகிய இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, அவர் தங்கியிருந்த வாடகை வீட்டின் மீது பயங்கரவாதி ஒருவர் கையெறி குண்டு வீசியதில் இருவரும் உயிரிழந்தனர்.
பயங்கரவாதி கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு இடத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.