முகப்பு
இந்தியா

சரத் பவாருக்கு உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:42 AM
தேசியவாத காங்கிரஸ் கட்சித் (என்சிபி) தலைவா் சரத் பவாா்
பகிர்:

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

மாநிலங்களவை உறுப்பினரான சரத் பவாருக்கு திங்கள்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இரு நாள்கள் மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு, நவம்பா் 3-ஆம் தேதி நடைபெறும் கட்சிக் கூட்டத்தில் அவா் கலந்துகொள்வாா் என கட்சியின் பொதுச் செயலாளா் சிவாஜிராவ் காா்கே தெரிவித்தாா்.

81 வயதான சரத் பவாருக்கு கடந்த ஆண்டு ஏப்ரலில் பித்தப்பையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வாயில் ஏற்படும் அல்சருக்கான மருத்துவச் சிகிச்சையையும் சரத் பவாா் மேற்கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →