கல்வி நிறுவனங்களை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் எனவும், இந்தியாவினுடைய முழுத்திறனையும் கல்வியில் செலுத்தி அதற்கான பலனைப் பெற வேண்டும் எனவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
ஐஐடி தில்லி தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 60 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் இறுதியில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதனை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசியதாவது: “ இந்தியாவில் எண்ணற்ற திறமைசாலிகள் உள்ளன. அவர்களின் திறனை இந்தியா முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய கல்வி நிறுவனங்களை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும். புதுமையான கற்றல் மற்றும் கற்பிக்கும் முறைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். ஐஐடிகள் நாட்டிற்கு பெருமை சேர்ப்பவை. ஐஐடிகளின் கதை சுதந்திர இந்தியாவின் கதையாகும்.” என்றார்.