இந்தியா

இந்தியா வந்தடைந்தார் வங்கதேச பிரதமர்: 4 நாள்கள் சுற்றுப்பயணம்

நான்கு நாள்கள் பயணமாக வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா திங்கள்கிழமை காலை தில்லி வந்தடைந்தார்.

DIN

நான்கு நாள்கள் பயணமாக வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா திங்கள்கிழமை காலை தில்லி வந்தடைந்தார்.

இந்த பயணத்தின்போது, புதிதாக பதவியேற்றுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளார்.

தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் ஷேக் ஹசீனா, பாதுகாப்பு ஒத்துழைப்பு, வா்த்தக உறவை விரிவுபடுத்துதல், மின்சாரம் மற்றும் எரிபொருள் துறையில் ஒத்துழைப்பு, எல்லை மேலாண்மை, போதைப்பொருள் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு ஆகியவை குறித்து விவாதிக்கவுள்ளனர்.

மேலும், இரு நாடுகளிடையே நீா் மேலாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ரயில்வே, சட்டம், செய்தி மற்றும் ஒலிபரப்பு உள்பட 7 துறைகளின் கீழ் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

கடந்த 2015 முதல் இருநாட்டுத் தலைவர்களும் 12 முறை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும், கடந்த 2021ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற நாட்டின் 50ஆம் சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை ஒன் செயலியை அறிமுகம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்!

1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்!

ஒடிசாவில் சுவர் இடிந்து பழங்குடியின தம்பதியர் பலி!

ஏசி பெட்டியில் வழங்கப்படும் போர்வைகளுக்கு ஆபத்து! ரயில்வேக்கு புதிய தலைவலி

விஜய்க்கு பிரமாண்ட மாலை: 4 பேர் மீது வழக்கு பதிவு

SCROLL FOR NEXT