வழக்குரைஞா் ராம் சங்கா் ராஜா. 
இந்தியா

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்குரைஞராக ராம் சங்கர் ராஜா நியமனம்

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தரப்பில் வழக்குரைஞராக ஆஜராக ராஜபாளையத்தை சேர்ந்த ராம் சங்கர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

 நமது நிருபர்

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தரப்பில் வழக்குரைஞராக ஆஜராக ராஜபாளையத்தை சேர்ந்த ராம் சங்கர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் சட்டம், நீதித் துறை மற்றும் சட்ட விவகாரங்கள் துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்குரைஞராக ராம் சங்கர் ராஜாவை நியமித்து செவ்வாய்க்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் அவரது பதவிக் காலம் 3 ஆண்டுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபாளையத்தைச் சேர்ந்த ராம் சங்கர் ராஜா, உச்சநீதிமன்றத்தில் 2012- ஆம் ஆண்டு முதல் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் தில்லி தமிழ் வழக்குரைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில பார் கவுன்சிலின் சிறப்பு வழக்குரை
ஞராகவும் உள்ளார். டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வழக்குரைஞராகவும் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் குற்றவியல் துறையில் முதுநிலைப் பட்டமும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் "கொலிஜியம்" என சொல்லப்படும் அமைப்பு குறித்த ஆய்வில் டாக்டர் பட்டமும் பெற்றவர். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தில்லி முதன்மை அமர்வில் அரசின் சார்பில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் சிறப்பு வழக்குரைஞராக முக்கிய வழக்குகளில் வாதாடியுள்ளார்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT