லடாக்கில் இரண்டாவது நாளாக மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட செய்தியில்,
லடாக்கின் லேவில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.36 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல், இன்று காலை 9.30 மணியளவில் கார்கிலில் 4.3 ரிக்டர் அளபிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் மக்கள் தஞ்சமடைந்தனர். எனினும், சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
தொடர்ச்சியாக லடாக் பகுதிகளில் இரண்டு நிலநடுக்கங்கள் உணரப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.