மரத்தில் தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட இளம் காதல் தம்பதி 
இந்தியா

என்ன நடக்கிறது உ.பி.யில்? மரத்தில் தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட இளம் காதல் தம்பதி

உத்தரப்பிரதேச மாநிலம் இளம் காதல் தம்பதியின் சடலங்கள் மரத்தில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

DIN


சந்த் கபீர் நகர்: உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் போன வாரம் சகோதரிகளின் சடலங்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இளம் காதல் தம்பதியின் சடலங்கள் மரத்தில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சந்த் கபீர் நகர் பகுதியில் ராம்பூர் கிராமத்தில் உள்ள மரத்தில், திங்கள்கிழமை மாலை, இளம் காதல் தம்பதியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

18 வயதான ஆண் மற்றும் 15 வயதே ஆன பெண் இருவரும் காதலித்து வந்ததாகவும், இவர்களது சாவில் மர்மம் இருப்பதாகவும், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று இருவரின் குடும்பத்தினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய செல்லிடப்பேசிகளும் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இருவரின் உடல்களும் உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் தெரிய வந்ததும் இது கொலையா தற்கொலையா என்பது உறுதி செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர கேரி மாவட்டத்தில், இரண்டு சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொன்று, மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை மாலை இளம் காதல் தம்பதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT