இந்தியா

நேரலையில் உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை

DIN

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் வழக்கு விசாரணை இன்று நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

உச்சநீதிமன்றத்தின் வழக்குகள் விசாரணை அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கபட்டு வருகின்றது.

இந்நிலையில், முதற்கட்டமாக சோதனை முறையில் மூன்று மாதங்களுக்கு தேசிய மற்றும் அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் இன்றுமுதல் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, முதல் வழக்காக பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவிகிதம் இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று நேரலையாக ஒளிபரப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, தில்லி அரசு - மத்திய அரசுக்கு இடையேயான அதிகாரம், மகாராஷ்டிர அரசியல் தொடர்பான வழக்குகளும் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT