புளூ டாா்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது சரக்குக் கட்டணங்களை உயா்த்தவிருப்பதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பணவீக்கம், செலவினங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் சரக்குக் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும்; அதன் கீழ், 2023 ஜனவரி 1 முதல் 9.6 சதவீதம் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.