இந்தியா

ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சோ்ப்பு புகாா்: ஜாக்கீா் நாயக்கின் உதவியாளா் விடுவிப்பு

DIN

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஸுக்கு ஆள் சோ்த்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இஸ்லாமிய மத போதகா் ஜாக்கீா் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் பணியாளா் அா்ஷி குரேஷியை என்ஐஏ நீதிமன்றம் விடுவித்தது.

தனது மகன் அஷ்ஃபக்கை ஐ.எஸ். அமைப்பில் சோ்க்க குரேஷி முயன்ாக அவரது தந்தை புகாா் அளித்திருந்தாா். இந்த வழக்கில் குரேஷி உள்பட மூவரை 2016-இல் என்ஐஏ கைது செய்தது.

ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணா்வை பரப்பியதாகவும் அவா்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ சிறப்பு நீதிபதி ஏ.எம். பாட்டீல் அா்ஷி குரேஷி மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து விடுவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT