முகப்பு
இந்தியா

கொச்சி மெட்ரோ ரயில் நிலையத்தின் அறிவிப்பால் இளம் தம்பதிகள் மகிழ்ச்சி

இளம் திருமண ஜோடிகள் மெட்ரோ ரயில் நிலையத்தை தங்களது திருமண புகைப்படங்களுக்கு கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என கொச்சி மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
கொச்சி மெட்ரோ
பகிர்:

இளம் திருமண ஜோடிகள் மெட்ரோ ரயில் நிலையத்தை தங்களது திருமண புகைப்படங்களுக்கு கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என கொச்சி மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்றைய காலத்தில் திருமணமாகும் இளம் ஜோடிகளுக்கு விருப்பமான ஒன்றாக இருப்பது புகைப்படங்கள். திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்கள் தொடங்கி தங்களது திருமண நிகழ்வின் அனைத்து கட்டங்களையும் புகைப்படங்களாக்கும் ஆர்வம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் கொச்சி மெட்ரோ ரயில் நிலையங்களில் புகைப்படங்களை கட்டணம் செலுத்தி எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒன்று முதல் 3 பெட்டிகள் வரை இதற்காக அனுமதிக்கப்படும் எனவும், தனிப்பெட்டிக்கு இரண்டு மணி நேரத்திற்கு ரூ.5000-ம், 3 பெட்டிகளுக்கு ரூ.12 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகரும் ரயில் பெட்டியில் புகைப்படங்கள் எடுக்க ரூ.8000 முதல் ரூ.17500 வரை கட்டணங்கள் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →