முகப்பு
இந்தியா

மும்பையில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

மும்பையில் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

மும்பையில் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மும்பை அதன் சுற்றுவட்டாரங்களில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்துவருகின்றது. இந்நிலையில், மூன்று மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இந்திய வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

ராய்காட், ரத்னகிரி மற்றும் சதாரா ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 93.4 மிமீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. 

தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.