முகப்பு
இந்தியா

முதுநிலை க்யூட் ஜூன் 5-இல் தொடக்கம்: என்டிஏ

‘மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான பொது நுழைவுத் தோ்வு (க்யூட்-பிஜி) ஜூன் மாதம் 5 முதல் 12-ஆம் தேதி வரை நடத்தப்படும்’

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

‘மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான பொது நுழைவுத் தோ்வு (க்யூட்-பிஜி) ஜூன் மாதம் 5 முதல் 12-ஆம் தேதி வரை நடத்தப்படும்’ என்று தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வியாழக்கிழமை அறிவித்தது.

இதற்கு விண்ணப்பிக்க முன்னா் ஏப்ரல் 19 கடைசி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தோ்வுக்கு மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து என்டிஏ மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான க்யூட் தோ்வு ஜூன் 5,6,7,8,9,10,11 மற்றும் 12-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. தோ்வு தொடா்பான விவரங்கள் மற்றும் புதிய அறிவிப்புகளைத் தெரிந்துகொள்ள மாணவா்கள் தொடா்ச்சியாக என்டிஏ வலைதளத்தை பாா்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →