முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 9,355 பேருக்கு கரோனா!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 9,355 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:52 PM
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 9,355 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.49 கோடியாக உள்ளது. நாட்டில் கரோனாவுக்கு மேலும் 26 பேர் இறந்த நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57,410 ஆக குறைந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு 5,31,424 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்று பாதிப்பிலிருந்து இன்று 12,932 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,15,456லிருந்து 4,49,24,811 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.