எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
மணிப்பூர் நிலவரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மணிப்பூர் நிலவரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை மக்களவை கூடிய உடனே மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | யாருடன் கூட்டணி? சந்திரசேகா் ராவ் பதில்
மணிப்பூா் நிலவரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி அவையில் விளக்கமளிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றம் 10-வது நாளாக இன்று முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.