முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

மணிப்பூர் நிலவரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:46 AM
பகிர்:

மணிப்பூர் நிலவரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத் தொடா் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று காலை மக்களவை கூடிய உடனே மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். 

மணிப்பூா் நிலவரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி அவையில் விளக்கமளிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார். 

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றம் 10-வது நாளாக இன்று முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →