இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை இன்றும் முடங்கியது!

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அமளி தொடர்ந்ததால், பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் இரண்டாவது நாளாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பகல் 12 மணிக்கு விவாதம் தொடங்கவுள்ள நிலையில், காலை 11 முதல் நடைபெற்று வரும் கேள்விநேரத்தை ஒத்திவைத்து மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT