பாகிஸ்தானில் சாலை விபத்து: 8 பேர் பலி, 10 பேர் காயம்!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
லாகூரில் இருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் உள்ள பஞ்சாப் மாவட்டத்தில் உள்ள மியான் சன்னுவில் இருந்து பாக்கருக்கு பயணிகள் வேன் சென்றுகொண்டிருந்த போது எதிர்த்திசையில் இருந்து வந்த மற்றொரு வாகனம் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் 6 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் தற்காலிக முதல்வர் மொஹ்சின் நக்வி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குமாறு சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார்.