தில்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 6 பேர் காயம்
வடமேற்கு தில்லியின் பவானாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததனர்.
வடமேற்கு தில்லியின் பவானாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததனர்.
இந்த தீ விபத்து சம்பவம் புதன்கிழமை இரவு 10.56 மணியளவில் நடைபெற்றது. சம்பவ இடத்திற்கு 30 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பவானா தொழில்துறை பகுதியில் உள்ள செக்டார்-5ல் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது.
தொழிற்சாலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதன் காரணமாக சுவர் மற்றும் கேட் இடிந்து விழுந்தது. இந்த தீ விபத்தைக் கட்டுப்படுத்த சென்ற 6 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மகரிஷி வால்மீகி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.