இந்தியா

புரி ஜெகந்நாதர் கோயிலில் நிர்மலா சீதாராமன் வழிபாடு! 

புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வழிபாடு செய்தார். 

DIN

புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வழிபாடு செய்தார். 

இவருடன், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, உள்ளூர் எம்எல்ஏக்கள் ஜெயந்த சாரங்கி மற்றும் லலிதேந்து பித்யாதர் மொகபத்ரா ஆகியோருடன் 30 நிமிடங்களுக்கு மேல் கோயிலுக்குள் இருந்தார். 

மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் மேரி மாதா மேரி தேஷ் கலை சிற்பத்தையும் கண்டு மகிழ்ந்தார். மேலும், சுதந்திரப் போராட்ட வீரர் சஹீத் ஜெய் ராஜ்குருவின் பிறந்த இடத்திற்குச் சென்று அங்கு அவர் மரியாதை செலுத்தினார். 

பின்னர், புவனேஸ்வர் திரும்பிய அவர், புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளார்  மற்றும் 20வது தேசிய சிஏ மாநாட்டின் தொடக்க விழாவில் அவர் கலந்துகொள்கிறார். 

சீதாராமன் புதன்கிழமை இரவு ஒடிசாவிற்கு இரண்டு நாள் பயணமாக புவனேஸ்வர் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியே சநாதனத்தை முறிக்க வல்ல ஒரே ஆயுதம்! - கமலுக்கு பாஜக உறுப்பினர்கள் கண்டனம்

உலக சினிமா

ஆபரேஷன் சிந்தூர்

தென்னாப்பிரிக்கக் காடுகளில்...

வெளிநாட்டு மண்ணில் முதல்முறை... இந்திய அணியின் தனித்துவமான சாதனை!

SCROLL FOR NEXT