லேண்டர் இறங்கிய இடத்திற்கு பெயர் சிவசக்தி: பிரதமர் மோடி
நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடம் 'சிவசக்தி' என்று அழைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடம் 'சிவசக்தி' என்று அழைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளை பிரதமர் மோடி சந்தித்தார். சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து, பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
இந்தியாவின் பெருமையான அசோக சக்கரம் தற்போது நிலவில் பதிக்கப்பட்டுள்ளது. நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடம் 'சிவசக்தி' என்று அழைக்கப்படும்.
நமது நாட்டின் கெளரவத்தை, பெருமையை உலகிற்கே நாம் நிரூபித்துள்ளோம். தென்னாப்ரிக்கா, கிரீஸ் சென்றிருந்தாலும் என் மனது முழுவதும் இங்குதான் இருந்தது. விஞ்ஞானிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நான் தலைவணங்குகிறேன் என்று பிரதமர் பேசினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.