இந்தியா

7 வயது சிறுவனோடு ஆற்றில் பாய்ந்து பெண் தற்கொலை

தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

DIN

மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தில் 33 வயதுள்ள பெண், தன் 7 வயது மகனுடன் ஆற்றில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை கேட்பூர்ணா ஆற்றின் கரையில் ஒதுங்கிய இருவரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்குக் காவலர்கள் அனுப்பியுள்ளனர்.

பெண்ணின் உடைமைகளில், அவர் வார்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அங்கிருந்து அகோலா பகுதிக்கு ரயில் மூலமாக வந்ததற்கும்  குரான்கெட் பகுதிக்கு பேருந்தில் வந்ததற்குமான பயணச் சீட்டுகள் கிடைத்துள்ளன.

அந்தப் பெண் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT