இந்தியா

ரூ.5000 கோடி இடைக்கால நிவாரணம் கோரும் தமிழக அரசு!

மிக்ஜம் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு, மத்திய அரசிடம் ரூ.5000 கோடி இடைக்கால நிவாரண உதவி கோரியுள்ளது.

DIN


சென்னை மற்றும் சில மாவட்டங்களில் தீவிர மழையால் பெரும் பாதிப்பைச் சந்தித்துவரும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கும், பெரிய சேதங்களை சரிசெய்வதற்கும் தமிழ்நாட்டிற்கு ரூ.5000 கோடி இடைக்கால நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கையிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய திருச்சி சிவா, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மொத்த அமைச்சரவையும், நகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள், துப்புரவுப் பணியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மீட்புப் படையினருடன் தீவிரமாக மீட்புப்பணிகள் நடந்துவருவதாகக் கூறியுள்ளார். 

அரசு நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பெரிய உள்கட்டமைப்பு பாதிப்புகளை சரிசெய்ய காலம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

மேலும், இடைக்கால நிவாரண உதவியாக 5000 கோடி ரூபாயை தமிழக அரசு கோரியுள்ளதாகக் கூறினார். மத்திய அரசு தமிழ்நாட்டின் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு ஆரம்ப கால நிவாரணத் தொகையாக ரூ. 5000 கோடியை உடனே மாநிலத்திற்கு வழங்கி வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

தாக்குதலுக்கு உள்ளான இளைஞா் தற்கொலை! தேசிய நெடுஞ்சாலையில் உறவினா்கள் மறியல்!

அந்தியூா் பேருந்து நிலையம் வாரச்சந்தை வளாகத்துக்கு மாற்றம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மயங்கி விழுந்த முதியவா் உயிரிழப்பு!

பவானி அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT