மிக்ஜம் புயலிலிருந்து மக்களைக் காப்பதற்காக இன்னும் சிறப்பான முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்க வேண்டும் என அதிமுக எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி. ரவீந்திரநாத், மிக்ஜம் புயலால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு போதிய அளவு நிதி ஒதுக்க வேண்டும் என நானும் கோரிக்கை வைக்கிறேன்.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்துள்ளேன். மழை பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கும் வகையில் கூடுதலான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.