முகப்பு
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி
இந்தியா

நம்பிக்கை இழக்கப் போவதில்லை: மெகபூபா முப்தி

ஜம்மு - காஷ்மீர் மக்கள் நம்பிக்கையை இழக்கப் போவதில்லை என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா

நம்பிக்கை இழக்கப் போவதில்லை: மெகபூபா முப்தி

ஜம்மு - காஷ்மீர் மக்கள் நம்பிக்கையை இழக்கப் போவதில்லை என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:24 PM
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி
பகிர்:

ஜம்மு - காஷ்மீர் மக்கள் நம்பிக்கையை இழக்கப் போவதில்லை என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. அந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் நடத்தப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில், சட்டப்பிரிவு 370-ஐ குடியரசுத் தலைவர் நீக்கியது செல்லும் என்றும் லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததை அங்கீகரிப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்து எக்ஸ் தளத்தில் மெகபூபா முப்தி பதிவிட்டது:

“ஜம்மு - காஷ்மீர் மக்கள் நம்பிக்கையையும் இழக்கவோ, முயற்சியை கைவிடப் போவதோ இல்லை. கெளரவம் மற்றும் கண்ணியத்துக்கான போராட்டம் தொடரும். இது எங்கள் பாதைக்கான முடிவல்ல.” என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →