இந்தியா

ஹைதராபாத்தில் மோசமான வானிலை: பெங்களூரு,மும்பை திரும்பிய 2 விமானங்கள்!

DIN

புது தில்லி: பெங்களூரு,மும்பையில் இருந்து ஹைதராபாத் சென்ற இரண்டு பயணிகள் விமானங்கள், மோசமான வானிலை காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் மீண்டும் பெங்களூரு, மும்பைக்கு திரும்பியது.

மும்பையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டுச் சென்ற யுகே837 என்ற பயணிகள் விமானம் திங்கள்கிழமை காலை புறப்பட்டு ஹைதராபாத் சென்றது. ஆனால் ஹைதராபாத்தில் மோசமான வானிலை காரணமாக ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் மீண்டும் காலை 9.15 மணியளவில் மும்பை விமான நிலையத்துக்கு திரும்பி வந்தது என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல், பெங்களூருவில் இருந்து ஹைதராபாத் சென்ற யுகே897 என்ற இரண்டாவது விமானமும் மோசமான வானிலை காரணமாக திருப்பி விடப்பட்டு பெங்களூரு விமான நிலையத்திற்கே திரும்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிர் கிரிக்கெட்: சென்னையில் இந்தியா - தெ.ஆப்பிரிக்கா ஆட்டங்கள்

அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்

வங்கதேச அணி அறிவிப்பு

புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை வரவேற்றது பிசிசிஐ

சர்ச்சைக்குரிய 'ரஷிய பாணி' மசோதா: ஜார்ஜியா நாடாளுமன்றம் நிறைவேற்றம்

SCROLL FOR NEXT