ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் பகுதியில் உள்ள பனிச்சறுக்கு மையத்தில் இன்று பிற்பகல் (பிப். 1) கடும் பனிச்சரிவு ஏற்பட்டது.
அஃபர்வத் சிகரத்தில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில் மலையடிவாரத்தில் இருந்த 10 வீடுகள் பனியில் புதைந்தன. இந்த சம்பவத்தின்போது பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த வீரர்கள் சிலர் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு ராணுவத்துடன் சென்ற அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில், இரண்டு பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்ததாகவும், 45 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.