முகப்பு
இந்தியா

பிப்ரவரி 12ல் சபரிமலை நடைதிறப்பு

சபரிமலை அய்யப்பன் கோயில் நடை பிப்ரவரி 12ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:28 AM
சபரிமலை
பகிர்:

சபரிமலை அய்யப்பன் கோயில் நடை பிப்ரவரி 12ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது. 

சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மலையாள மாதத்தின் கும்பம் மற்றும் தமிழில் மாசி மாத பிறப்பை முன்னிட்டு பிப்.12ல் சபரிமலை கோயிலில் நடை திறக்கபடுகிறது. 

வரும் 17 வரை சபரிமலை கோயில் நடைதிறந்திருக்கும். முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது. 

சபரிமலையில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான மண்டல மகரவிளக்கு சீசன் கடந்த மாதம் 20 ஆம் தேதி நிறைவடைந்தது. 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதன்மூலம் ரூ.380 கோடி வருமானம் தேவஸ்தானத்திற்கு கிடைத்தது.

முழு கட்டுரையைப் படிக்க →