முகப்பு
இந்தியா

விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் வெடி விபத்து: 10 பேர் காயம் 

விசாகப்பட்டினத்தில் எஃகு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:29 AM
பகிர்:

விசாகப்பட்டினத்தில் எஃகு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். 

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பொதுத் துறை நிறுவனமான எஃகு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சனிக்கிழமை பிற்பகல் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பத்து பேர் படுகாயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் ஸ்டீல் ஆலை பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சிஐஎஸ்எஃப் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். 

அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆலையின் இரும்பு உருகும் கடை-2 இல் திரவ இரும்புப் பொருள் வெடித்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் இவ்விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →