பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நாகாலாந்து வந்தடைந்தார்.
திமாபூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய நட்டாவுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் டெம்ஜென் இம்னா உற்சாக வரவேற்பு அளித்தார்.
பிப்ரவரி 24-ம் தேதி நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்காக நட்டா நாகாலாந்து வந்தடைந்தார்.
நட்டாவை வரவேற்க பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் திமாபூர் விமான நிலையத்தில் வந்திருந்தனர்.
2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மோடி தலைமையிலான மத்திய அரசு ஆக்ட் ஈஸ்ட் கொள்கையின் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது.
மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது.
திரிபுரா தேர்தலுடன் இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன.